டெல்லி: தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் தீர்மானம் கொண்டுவந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றார். நாளை கூட்டம் நடைபெற இருந்த நிலையில் இன்றே ஒழுங்காற்று குழு கூடியது. காவிரியில் இருந்து 16,000 கன அடி வீதம் நீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. அக்டோபர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தண்ணீர் திறக்க முடியாத சூழல் இருப்பதாக கர்நாடக அரசு விளக்கம் அளித்த நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருக்கிறது.
The post தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை..!! appeared first on Dinakaran.